நாகப்பட்டினத்தைச் சேர்ந்த தென்னவன் என்னும் இளைஞரும், சென்னையை சேர்ந்த இளம்பெண் ஒருவரும் ஃபேஸ்புக் மூலம் பேசிப்பழகி காதலிக்கத் தொடங்கியுள்ளனர்.

 

இந்த நிலையில் கடந்த 30-ம் தேதியன்று அப்பெண்ணின் உறவினர்கள் அனைவரும் கேரளாவுக்கு சென்றுவிட, வீட்டில் அவர் மட்டும் தனியாக இருந்துள்ளார்.

 

இதனையறிந்த தென்னவன் அவரின் வீட்டுக்குச் சென்று அப்பெண்ணின் கையால் பிரியாணி சாப்பிட்டுள்ளார். பிரியாணி சாப்பிட்ட கொஞ்ச நேரத்தில் தென்னவனுக்கு வலிப்பு வந்துவிட அதிர்ச்சியடைந்த அப்பெண் அக்கம், பக்கத்தினர் உதவியோடு அருகில் உள்ள மருத்துமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார்.

 

அங்கு தென்னவனைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகக் கூறிவிட்டனர். இச்சம்பவம் அனைவருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

 

தென்னவனின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் அதுகுறித்து போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என்றும், அவரின் தந்தை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

BY MANJULA | MAY 4, 2018 8:49 PM #FACEBOOK #VADACHENNAI #DEATH #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS