தனது கணவர் தாடி பாலாஜியை விவாகரத்து செய்வது உறுதி என, அவரது மனைவி நித்யா தெரிவித்துள்ளார்.

 

பிக்பாஸ் வீட்டிலிருந்து கடந்த வாரம் 3-வது போட்டியாளராக நித்யா வெளியேற்றப்பட்டார். பிக்பாஸ் வீட்டில் இருந்த ஆரம்ப நாட்களில், தாடி பாலாஜி-நித்யா இருவருக்கும் சண்டைகள் ஏற்படுவது போல காட்டப்பட்டது. பின்னர் இருவரும் சமாதானமாவது போலவும் காட்டப்பட்டது.

 

இதனால் இருவரும் சமாதானமாகி விட்டனர் என்று அனைவரும் நினைத்துக் கொண்டிருக்க, அது உண்மையில்லை என நித்யா தனது பேட்டியில் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து நமது தளத்திற்கு அவர் அளித்த பேட்டியில், " பாலாஜியை விவாகரத்து செய்வது உறுதி. இது மீண்டும் எனக்கு எதிர்மறை பிம்பத்தை கொடுக்கலாம்.

 

இந்த பொண்ணு இவ்வளவு தூரம் பண்ணிட்டு வெளில வந்து இப்படி பேசுதேன்னு நெனைக்கலாம். ஆனால் கண்டிப்பாக நான் விவாகரத்து செய்வதில் உறுதியாக இருக்கிறேன்,'' என தெரிவித்துள்ளார்.

 

நித்யாவின் முழுமையான பேட்டியை கீழே காணலாம்...

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS