எழுத்தாளரும், திரைக்கதை ஆசிரியருமான பாலகுமாரன்(71) உடல்நலக்குறைவு காரணமாக, சென்னையில் இன்று காலமானார்.

 

'மெர்க்குரி பூக்கள்' நாவலின் மூலம் எழுத்தாளராக அறிமுகமானவர் பாலகுமாரன். தொடர்ந்து பல புகழ்பெற்ற நாவல்களை எழுதிய பாலகுமாரன் 'நாயகன்' படத்தின் வழியாக திரைத்துறையிலும் கால் பதித்தார்.

 

ஜென்டில்மேன், பாட்ஷா, குணா, காதலன், புதுப்பேட்டை உட்பட 20-க்கும் மேற்பட்ட படங்களுக்கு பாலகுமாரன் திரைக்கதை-வசனம் எழுதியுள்ளார்.

 

தமிழக அரசின் கலைமாமணி உள்ளிட இலக்கியத்துறை சார்ந்த பல்வேறு விருதுகளை பெற்றுள்ள பாலகுமாரன், சமீப காலமாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தார். இந்தநிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாலகுமாரன் இன்று பிற்பகல் காலமானார்.

 

பாலகுமாரனின் மறைவுக்கு திரையுலகம் மற்றும் எழுத்துலகை சேர்ந்தவர்கள் தற்போது இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

BY MANJULA | MAY 15, 2018 2:28 PM #BALAKUMARAN #WRITER #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS