Looks like you've blocked notifications!

கலிஃபோர்னியாவில் உள்ள யூ ட்யூபின் தலைமை அலுவலகத்தில், பெண் ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் மூன்று பேர் காயமானதுடன், அவரும் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார் என போலீசார்  தெரிவித்துள்ளனர்.

 

கூகுளுக்கு சொந்தமான இந்த அலுவலகத்தில், சுமார் 1700 பேர் பணி புரிந்து வருவதாகக் கூறப்படுகிறது.

 

இந்நிலையில், நேற்று மதியம் 12 மணி அளவில் இந்த அலுவலகத்திற்கு வந்த பெண் சரமாரியாக சுட ஆரம்பித்ததில் மூன்று பேர் மீது குண்டு பாய்ந்துள்ளது.  இறுதியில், அந்த பெண் தன்னையும் சுட்டு தற்கொலை செய்துள்ளார்.

 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

 

துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட பெண்ணின் அடையாளம் கண்டுபிடிக்கப்படாத நிலையில், அவர் கை துப்பாக்கியை வைத்திருந்தது தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

BY SATHEESH | APR 4, 2018 9:29 AM #YOUTUBE #GUNSHOT #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS