Looks like you've blocked notifications!

புளோரிடாவைச் சேர்ந்த எமி பிரைட் என்ற பெண்மணி 2003-ம் ஆண்டு தன் மகனை பிரசவித்தபோது,   மருத்துவர்கள் அறுவை சிகிச்சைக்கான ஊசியை தவறுதலாக அவருடைய முதுகுத்தண்டில் வைத்து தைத்துள்ளனர்.

 

அறுவை சிகிச்சை முடிந்து இரண்டு மாதங்களிலேயே, முதுகு வலியை உணரத்தொடங்கினார் பிரைட்.  தொடர்ந்து, கடந்த வருடம் செய்த ஸ்கேன் முடிவில், அவரது முதுகு தண்டில் 3 சென்டிமீட்டர் நீளமுடைய ஊசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் எமி பிரைட்டின் முதுகு தண்டில் ஊசி இருப்பது, அவருக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களுக்கு தெரிந்தும் அதனை தெரியப்படுத்தாமல் விட்டுள்ளனர்.

 

இதனால், தற்போது அவருடைய முதுகு தண்டிலிருந்து ஊசியை அகற்றுவது இயலாத காரியம் ஆகியுள்ள  நிலையில், எமி பிரைட் தன்னுடைய கால் செயல்பாட்டை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

BY SATHEESH | MAR 29, 2018 4:38 PM #MEDICALOPERATION #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS