Looks like you've blocked notifications!

மதுரை பழங்காநத்தம் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி மூர்த்தி, தன் மனைவி பிரியா (25) மற்றும் 4 குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார்.

 

கணவரின் வருமானம் குடும்பம் நடத்துவதற்கு போதுமானதாக இல்லாததால், கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.


இந்நிலையில், பிரியா தன்னுடைய கணவருக்கு தெரியாமல் ஒருவரிடம் கடன் வாங்கியுள்ளார்.

 

இது மூர்த்திக்கு தெரியவந்தபோது, மனைவியை நேற்று கண்டித்துவிட்டு, வேலைக்குச் சென்றுள்ளார். பிரியாவின் மூத்த குழந்தைகள் இருவரும் பள்ளிக்குச் சென்று விட்டனர்.

 

கணவரின் கண்டிப்பால் மனமுடைந்த பிரியா, தன் வீட்டில் இருந்த மகள் முருகேஸ்வரி (4) மற்றும் மகன் விஜய்கணேஷ் (8 மாதம்)  ஆகியோருக்கு விஷத்தை கொடுத்து விட்டு, தானும் விஷம் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

 

மதியம் வீடு திரும்பிய மூர்த்தி, மனைவியும் குழந்தைகளும் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

BY SATHEESH | APR 4, 2018 11:34 AM #SUICIDE #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS