Looks like you've blocked notifications!

சிதம்பரம் அருகே உள்ள பரதூர் கிராமத்தில், 16 வயது நிரம்பிய சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில், இன்று காலை வயல்வெளி அருகே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக புதிய தலைமுறை செய்தி வெளியிட்டுள்ளது.

 

கடந்த ஞாயிற்றுக்கிழமை துணிக்கடைக்கு வேலைக்கு சென்ற அந்த சிறுமி, மாலை வீடு திரும்பாததால் அவருடைய பெற்றோர் அந்த பகுதி முழுவதும் அவரை தேடியுள்ளனர்.

 

இந்நிலையில், இன்று காலை ஊருக்கு வெளியே உள்ள ஒரு வயல்வெளியில், அந்த சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

 

இதுகுறித்து, அந்த சிறுமியின் பெற்றோர் தன் மகளை அந்த கிராமத்தைச் சேர்ந்த மூன்று பேர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

 

இந்த சம்பவம் குறித்து, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் ஒரத்தநாடு போலீசார் நான்கு பேரை கைது செய்துள்ளனர்.

BY SATHEESH | APR 3, 2018 2:03 PM #RAPE #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS