Looks like you've blocked notifications!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, திமுக மற்றும் அதன் ஆதரவுக் கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் நாளை (ஏப்ரல் 5) முழுஅடைப்புப் போராட்டம் நடைபெற உள்ளது.

 

இந்த போராட்டத்திற்கு  பல்வேறு கட்சி தொழிற்சங்கங்கள் ஆதரவு அளித்துள்ள நிலையில், தொமுச, சிஐடியூ, ஏஐடியுசி உள்ளிட்ட 10 போக்குவரத்து தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள், இன்று சென்னை பல்லவன் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர்.

 

அப்போது, நாளை நடைபெறும் போராட்டத்தில் சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படாது என கூட்டாக அறிவித்தனர்.

 

இந்நிலையில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்,  பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம், நாளை அனைத்து பேருந்துகளும் இயக்கப்படும், என தெரிவித்துள்ளார்.

BY SATHEESH | APR 4, 2018 8:18 PM #TNBANTH #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS