20 வயது கணவரின் காதை துப்பாக்கி முனையில், 40 வயது மனைவி துண்டித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா பகுதியை சேர்ந்த முகம்மது தன்வீர்(20) தன்னைவிட 20 வயது மூத்தவரான,  மும்தாஜ் என்பவரை 2 வருடங்களுக்கு முன் திருமணம் செய்துள்ளார். திருமணத்துக்குப்பின் மும்தாஜ், தன்வீரை தினமும் அடித்து உதைத்து கொடுமைப்படுத்தியுள்ளார்.

 

இதனால் தன்வீர் அடிக்கடி வீட்டைவிட்டு ஓடிவிடுவாராம். ஆனால் மும்தாஜ் அவரை தேடிக்கண்டுபிடித்து மீண்டும் வீட்டுக்கு அழைத்து வந்து விடுவாராம். இதற்கிடையில் தன்வீரின் வீட்டை சமீபத்தில் பெரும்தொகைக்கு விற்று அந்த பணத்தை மும்தாஜிடம் கொடுத்து, தனது மகனை விட்டுவிடும்படி தன்வீரின் தாயார் அவரிடம் கெஞ்சியிருக்கிறார்.

 

ஆனால் மும்தாஜ் அதனைக் கண்டுகொள்ளாமல் தன்வீரை தினமும் கொடுமைப்படுத்தி வந்திருக்கிறார். சம்பவ தினமான நேற்றிரவு மும்தாஜ் மற்றும் அவரது சகோதரிகள் ஒன்று சேர்ந்து, துப்பாக்கி முனையில் தன்வீரின் காதை துண்டித்துள்ளனர்.

 

அவர்களிடமிருந்து தப்பி ஓடிய தன்வீரை அவரது உறவினர்கள் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதுகுறித்து தன்வீர் மற்றும் அவரது உறவினர்கள் போலீசில் புகார் கொடுக்க,போலீசார் தற்போது வழக்குப்பதிவு செய்து தலைமறைவான மும்தாஜ் மற்றும் அவரது சகோதரிகளை வலைவீசித்தேடி வருகின்றனர்.

BY MANJULA | JUL 18, 2018 3:00 PM #KOLKATA #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS