ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டு கிரிக்கெட் வீரர் விராட் கோலி வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோவில் விராட் பேசுகையில், "11-வது ஐபிஎல் சீசன் போட்டியில் எங்களால் நினைத்த அளவு சிறப்பாக விளையாட முடியவில்லை.

 

நாங்கள் விளையாடிய விதம் என்னை மிகவும் வேதனைப்படுத்தியது, காயப்படுத்தி இருக்கிறது. ஆர்சிபி ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப எங்களால் விளையாட முடியாததை நினைத்து வேதனைப்படுகிறேன். ரசிகர்களிடம் ஆழ்ந்த மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இதுவும் வாழ்க்கையின் ஒருபகுதிதான். வாழ்க்கையில் உங்களுக்குத் தேவையானது எல்லாம் கிடைத்து விடாது.

 

அடுத்த சீசனில் அனைத்தும் மாற வேண்டும் என விரும்புகிறேன். அடுத்த ஆண்டு, ஐபிஎல் சீசனில் இன்னும் கூடுதல் முயற்சிகளோடு, அதிகமான பலத்தோடு நாங்கள் களமிறங்கி விளையாடுவோம்,'' இவ்வாறு மிகவும் உருக்கமான முறையில் விராட் கோலி பேசியிருக்கிறார்.

 

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS