Looks like you've blocked notifications!

ஐபிஎல் 2018 டி-20 போட்டித் தொடர், வரும் ஏப்ரல் மாதம் மாதம் 7-ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில், நடப்பு தொடரில் சென்னை அணிக்காக விளையாடவிருக்கும் கிரிக்கெட் வீரர்கள் முரளி விஜய், டுவைன் பிராவோ இருவரும் ஒன்றாக செய்தியாளர்களை இன்று சந்தித்தனர்.

 

இந்த சந்திப்பின்போது பிராவோ, "சென்னை எனக்கு சொந்த ஊர் போன்றது. கடந்த இரண்டு வருடங்களாக சென்னை அணிக்காக விளையாடாதது வருத்தமாக இருந்தது,'' என்றார்.

 

தொடர்ந்து பேசிய முரளி விஜய், சென்னை அணி தன்னை ஏலத்தில் எடுப்பதற்கு முந்தைய நாள் கவுண்டி போட்டியில் விளையாட தன்னிடம் பேச்சுவார்த்தை நடந்ததாகவும், சென்னை அணியில் தேர்வானபோது மிகுந்த மகிழ்ச்சி அடைந்ததாகவும் தெரிவித்தார்.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS