Watch Video: 'கவலைப்படாதீங்க'.. இந்திய வீரர்களுக்கு ஆறுதல் கூறிய 'அழுகை' சிறுவன்!

Home > தமிழ் news
By |
Watch Video: 'கவலைப்படாதீங்க'.. இந்திய வீரர்களுக்கு ஆறுதல் கூறிய 'அழுகை' சிறுவன்!

இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி டிராவில் முடிந்ததை தாங்க முடியாமல் மைதானத்தில் அழுத சிறுவனை நாம் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டோம்.

 

அந்த சிறுவனின் அழுகையைப் பார்த்த இந்திய வீரர்களும், ஆப்கானிஸ்தான் வீரர்களும் தற்போது அந்த சிறுவனை சமாதானப்படுத்தியுள்ளனர். குறிப்பாக இந்திய வீரர் புவனேஷ்வர் குமார் அந்த சிறுவனை போனில் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்.

 

அப்போது அந்த சிறுவன் புவனேஷிடம்,''கவலைப்படாதீங்க புவி. நாம இறுதிப்போட்டியில ஜெயிச்சுடலாம்,'' என நம்பிக்கை அளித்திருக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

 

இதேபோல ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கான், மொகம்மது சஷாத் உள்ளிட்ட வீரர்களும் அந்த சிறுவனுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளனர்.

 

 

இதனால தான் கிரிக்கெட்டை ஜென்டில்மேன் கேம்னு சொல்றாங்க போல..