தெலுங்கின் இளம் நடிகர்களில் ஒருவரான நானி தன்னுடன் தவறாக நடந்து கொண்டதாக நடிகை ஸ்ரீரெட்டி புகார் கூறினார். பதிலுக்கு நானி அவருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்.

 

இந்தநிலையில் இதுகுறித்து நடிகர் விஷால் கூறுகையில், "நடிகர் நானி எனது நல்ல நண்பர். அதற்காக நான் அவருக்கு ஆதரவாகப் பேசவில்லை. அவர் ஆண்கள் மற்றும் பெண்களிடம் எப்படி ஒழுக்கத்துடன் பழகுவார் என்பது அனைவருக்கும் நன்றாக தெரியும். ஸ்ரீரெட்டியின் இந்த குற்றச்சாட்டு மிகவும் கேவலமான ஒன்று.

 

ஸ்ரீ ரெட்டி கூறும் புகார்கள் உண்மையென்றால், அதை நிரூபிக்கும் ஆதாரங்களை வெளியிட வேண்டும். அதை விட்டுவிட்டு, வேண்டுமென்றே ஒவ்வொருவர் மீது தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். அவர் அடுத்ததாக என் மீது கூட புகார் கூறலாம்,” என கருத்துத் தெரிவித்துள்ளார்.

BY MANJULA | JUN 14, 2018 1:05 PM #VISHAL #SRIREDDY #NANI #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS