நயன்தாரா, அனுராக் காஷ்யப், அதர்வா நடிப்பில் உருவாகியிருக்கும் 'இமைக்கா நொடிகள்' படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் இன்று வெளியானது.

 

விழாவில் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் பேசுகையில் "நான், விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் மூவரும் அஜய் ஞானவேலுவின் 'டிமாண்டி காலனி' படத்தை ஒன்றாக பார்த்தோம். குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட அப்படம் எங்களைக் கவர்ந்தது.

 

அப்போது விஜய், அஜய் ஞானவேலுவுடன் இணைந்து படமொன்றில் பணியாற்றுமாறு என்னிடம் கேட்டுக்கொண்டார். நான் அஜய்யிடம், விஜய்க்கு ஒரு கதை எழுதுமாறு கேட்டேன். ஆனால் சில காரணங்களால் அது நடைபெறாமல் போய்விட்டது,'' என்றார்.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS