யார் மீதும் காதலில் விழுந்து விட வேண்டாம் என்று நடிகர் விஜய் அட்வைஸ் செய்ததாக நடிகை சங்கீதா தெரிவித்திருக்கிறார். சமீபத்தில் நமது தளத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில், விஜய்க்கும் தனக்கும் இடையிலான நட்பினை அவர் பகிர்ந்து கொண்டுள்ளார். அதுகுறித்த விவரங்களை இங்கே பார்ப்போம்.

 

"எஸ்.ஏ.சந்திரசேகர் அங்கிள் எனது தாத்தாவின் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அதனால் எங்களது 2 குடும்பங்களுக்கும் இடையில் நல்ல நட்பு இருந்தது. விஜய்யின் 2-வது அல்லது 3-வது படமென்று நினைக்கிறேன். அதில் நடிக்க வாய்ப்பு வந்தது. எனது அம்மாவும் விஜய்யுடன் இணைந்து அறிமுகம் ஆவதை விரும்பினார். ஆனால் எதிர்பாராத காரணங்களினால் அப்படத்தில் என்னால் நடிக்க முடியவில்லை. அது கோயமுத்தூர் மாப்பிள்ளை என நினைக்கிறேன்.

 

நான் அப்போது மேடை நடனத்தில் சிறந்து விளங்கினேன். அப்போது ஒரு ஸ்பெஷல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க (விஜய் ஸ்டார் நைட்)விஜய் மூலம் எனக்கு வாய்ப்பு கிடைத்தது.அதில் நான் கலந்துகொண்ட பிறகு எனக்கும் விஜய்க்கும் இடையில் நட்பு துளிர்த்து. யார் மீதும் காதலில் விழுந்து விடாதே என அவர் சொல்லிக்கொண்டே இருப்பார். நான் பாதுகாப்பாக இருப்பதை அவர் விரும்பினார்.

 

என்னைப்பற்றி ஏதாவது வதந்தியோ, கிசுகிசுவோ வந்தால் முதலில் எனக்கு கால் செய்து அதுகுறித்து தெளிவுபடுத்திக் கொள்வார். நான் கிரிஷ் மீது காதலில் விழுந்தபோது, விஜய்யை சந்தித்து கிரிஷை அறிமுகம் செய்துவைத்தேன். கிரிஷைப் பார்த்த பின்பு என்னைக் கட்டியணைத்து மிகவும் சந்தோஷப்படுவதாக தெரிவித்தார்.

 

கிரிஷ் நல்ல பையன் என்றும் இருவரின் ஜோடிப்பொருத்தம் நன்றாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். என்னைப் பொறுத்தவரை விஜய் என்னுடைய நலனில் அதிக அக்கறை கொண்டவர். கிரிஷின் ஒரிஜினல் பெயர் விஜய். தளபதி விஜய்-சங்கீதா, விஜய்(கிரிஷ்)-சங்கீதா என எங்களின் பெயர்ப்பொருத்தம் இருப்பது இனிமையாக உள்ளது,"என்றார்.

BY MANJULA | MAY 29, 2018 10:37 AM #VIJAY #THALAPATHY62 #SANGEETHA #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS