’யாரையும் புண்படுத்தும் நோக்கம் அல்ல..சில காட்சிகளையும், சர்ச்சைக்குரிய வசனங்களையும்..’: இயக்குனர் வெற்றிமாறன்!

Home > தமிழ் news
By |
’யாரையும் புண்படுத்தும் நோக்கம் அல்ல..சில காட்சிகளையும், சர்ச்சைக்குரிய வசனங்களையும்..’: இயக்குனர் வெற்றிமாறன்!

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் தயாரித்து நடித்துள்ள திரைப்படம் வடசென்னை. தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் இப்படத்தில் மீனவர்கள் தவறாக சித்தரிக்கப்படுவதாக, மீனவர் சமுதாய சங்கங்களின் சார்பிலும் சில ஆர்வலர்கள் சார்பிலும் மனு, வழக்கு மூலம் குற்றம் சாட்டப்பட்டது.  

 

இந்நிலையில் இவற்றுக்கெல்லாம் விளக்கமளித்த இயக்குனர் வெற்றிமாறன், ‘எங்களுடைய நோக்கம் யாரையும் புண்படுத்துவதல்ல’ என்றும், வடசென்னை படத்தில் மீனவர் சமூகத்தை புண்படுத்தும் காட்சிகள், ஆபசமாக உள்ள வசனங்கள் 7 நாட்கள் முதல் 10 அலுவலக நாட்களுக்குள் நீக்கப்படும் என்றும் கூறியுள்ளார். 

 

மேலும் இப்படத்தின் அடுத்தடுத்த பாகங்களில் வடசென்னை மக்களின் வாழ்வியல் சிக்கல்கள், பிரச்சனைகள், தீர்வுகள் குறித்தவற்றையே பேசவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

VADACHENNAI, VETRIMARAN