Looks like you've blocked notifications!

உத்தரப்பிரதேசம் மாநிலம் மதுராவைச் சேர்ந்த பிம்லா என்ற பெண், தனது கணவனை முதுகில் தூக்கிச்சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

அவரது கணவர் சமீபத்தில் நடைபெற்ற விபத்தில் ஒரு காலை இழந்து விட்டார். இதனால் மாற்றுத்திறனாளி சான்றிதழ் வாங்க பிம்லா மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்றுள்ளார்.

 

அங்கு புகைப்படம் எடுக்க பிம்லாவின் கணவர் வர வேண்டும் என்று கூறி விட்டனர். இதையடுத்து தனது கணவரை முதுகில் சுமந்து வீட்டிலிருந்து ஆட்சியர் அலுவலகத்திற்கு பிம்லா சென்றுள்ளார்.

 

இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.சமீபத்திய நிலவரத்தின்படி, பிம்லாவின் கணவருக்கு மாற்றுத்திறனாளி சான்றிதழ் கிடைத்து விட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

BY MANJULA | APR 4, 2018 1:09 PM #UTTARPRADESH #INDIA #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS