தொல்லை கொடுத்த முன்னாள் காதலனின் நாக்கை பெண் வெட்டியெறிந்த சம்பவம், உத்தர பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

உத்தர பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவர் திருமணத்துக்கு முன் வாலிபர் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். நாளடைவில் திருமணமாகி அப்பெண் கணவருடன் வேறு இடத்துக்கு சென்றுவிட்டார்.

 

இந்தநிலையில்,சம்பவ தினத்தன்று அந்த வாலிபர் அப்பெண்ணின் வீட்டுக்கு சென்றிருக்கிறார்.அங்கு அவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் அப்பெண் அந்த வாலிபரின் நாக்கைத் துண்டித்து விட்டார்.

 

இதனைத்தொடர்ந்து வெட்டுப்பட்ட நாக்கை எடுத்த வாலிபர் அதனைக்கொண்டு சென்று அருகில் உள்ள காவல் நிலையம் சென்று புகார் அளித்துள்ளார். பதிலுக்கு அப்பெண் அவர் தன்னைப் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாகத் தெரிவித்துள்ளார்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS