Looks like you've blocked notifications!

தமிழ்நாடு முழுவதும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி போராட்டங்கள் நடைபெற்று வரும் வேளையில், நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டி குறித்து டிடிவி தினகரன் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

 

இந்நிலையில் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், "விவசாயிகளின் வேதனையில் பங்கெடுக்கும் விதமாக ஆர்ப்பாட்டம், போராட்டம் என நாள்தோறும் நடத்தி தங்கள் உணர்வுகளை மக்கள் வெளிப்படுத்தி வரும் இந்த நேரத்தில், ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடக்க இருக்கிறது.

 

காவிரி உரிமை மீட்பு போராட்டத்தில் விவசாயிகளின் குரலுக்கு வலு சேர்க்கும் விதமாக இந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை புறக்கணிக்குமாறு தமிழக கிரிக்கெட்  ரசிகர்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன்", என தெரிவித்துள்ளார்.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS