Looks like you've blocked notifications!

தெலங்கானா மாநிலம், நல்கொண்டா மாவட்டத்தில் விவசாய கூலித் தொழிலாளர்கள் சென்ற டிராக்டர் கால்வாயில் விழுந்ததில் சுமார் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

தெலங்கானாவின் வட்டிபட்லா கிராமம் அருகே வந்தபோது, டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த கால்வாயில் விழுந்துள்ளது.

 

கால்வாயில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால், அந்த டிராக்டரில் பயணித்த சுமார் 30-க்கும் மேற்பட்டோர் தண்ணீரில் மூழ்கி தத்தளித்துள்ளனர்.

 

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், உள்ளூர் மக்களுடன் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில், 12 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், மேலும் சிலர் தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

BY SATHEESH | APR 6, 2018 11:11 AM #TELANGANA #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS