Looks like you've blocked notifications!

காவிரி,ஸ்டெர்லைட் போராட்டங்கள் நடைபெற்று வருவதால் ஐபிஎல் போட்டிகளை சென்னையில் நடத்தக்கூடாது என, எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றன.

 

இதனால், சென்னையில் நடைபெறவிருந்த அனைத்து போட்டிகளும் தற்போது வேறு இடத்துக்கு மாற்றப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

இந்த நிலையில் ஏப்ரல் 20-ம் தேதி சென்னையில் நடைபெறவிருந்த சென்னை-ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான, ஐபிஎல் டிக்கெட் விற்பனை தற்போது சேப்பாக்கம் மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

 

சென்னையில் நடைபெறவிருந்த ஐபிஎல் போட்டிகள் திருவனந்தபுரம், விசாகப்பட்டினம், ராஞ்சி, புனே ஆகிய மைதானங்களுக்கு மாற்றப்படலாம் என கூறப்படுகிறது.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS