13 வயது சிறுமி, பலாத்காரம் செய்த நபர் இருவரையும் உயிருடன் எரிக்க முடிவு செய்த கிராம பஞ்சாயத்து!

Home > தமிழ் news
By |
13 வயது சிறுமி, பலாத்காரம் செய்த நபர் இருவரையும் உயிருடன் எரிக்க முடிவு செய்த கிராம பஞ்சாயத்து!

ஜார்கண்ட்டின் சாய்பாஸா பகுதிக்கு உட்பட்ட மஞ்சரி எனும் கிராமத்தில் நிகழ்ந்திருக்கும் அதிர்ச்சிகரமான சம்பவம் பலரையும் விவாதத்துக்கு உட்படுத்தியிருக்கிறது.  இந்த கிராமத்தில் 13 வயது பெண் குழந்தையை, குழந்தையின் சொந்த மாமாவே கற்பழித்துள்ளார். ’


இதனால் கற்பமடைந்த வளரிளம் பெண் ஊரின் முன் வெளிச்சத்துக்கு வரவே, இதனை அறிந்த அந்த ஊரின் பாரம்பரிய பஞ்சாயத்து, ஊரின் மரபு மற்றும் பண்பாட்டு கட்டுப்பாடுகள் அழிந்துவிட்டதாக எண்ணியும், அதற்குக் காரணமாக- அதாவது ஊரின் மரியாதையை கெடுத்து, ஊரின் கவுரவத்துக்கு களங்கம் விளைவித்ததாகச் சொல்லி, பாதிக்கப்பட்ட 13 வயது பெண் குழந்தையையும் , பலாத்காரம் செய்தவரையும் உயிருடன் எரித்துக் கொல்லவும், அப்படி இல்லை என்றால் 5 லட்சம் அபராதமும் கட்டச் சொல்லி தீர்ப்பளித்துள்ளது.


இதனை கேள்விப்பட்ட போலீசார், 6-ம் வகுப்பு படித்துவந்த 13 வயது குழந்தையை பலாத்காரம் செய்த குழந்தையின் 28 வயது மாமாவை கைது செய்ததோடு இதுபோன்று தீர்ப்பளித்த பஞ்சாயத்து முக்கியஸ்தர்களையும் விசாரித்து வழக்குப் பதிவு செய்து வருவதோடு, அவர்களின் செயலுக்காக எச்சரித்துள்ளது.

SEXUALABUSE, MANJHARIPANCHAYAT, JHARKHAND, CHAIBASA, MINORGIRL