திருவள்ளூர் மாவட்டம் வெளியகரம் பகுதியை சேர்ந்த அரசுப்பள்ளி ஆசிரியர் பகவான் இடமாற்றம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து,மாணவர்கள் தங்களது பெற்றோர்களுடன் போராட்டம் நடத்தினர்.

 

இதனைத் தொடர்ந்து அவரின் பணிமாறுதல் உத்தரவை தற்காலிகமாக அரசு நிறுத்தி வைத்துள்ளது.ஆசிரியர்-மாணவர்களின் இந்த பாசப்போராட்டம் கடந்த சில நாட்களாக ஊடகங்கள் மற்றும் வலைதளங்களில் பிரபலமாக, இதன் மூலம் ஆசிரியர் பகவான் வெளிச்சத்திற்கு வந்துள்ளார்.

 

இந்தநிலையில், ஆசிரியர் பகவான் இன்னும் ஒருசில தினங்களில் பணியிட மாற்றம் செய்யப்படுவார் என முதன்மைக் கல்வி அலுவலர் ராஜேந்திரன் தெரிவித்திருக்கிறார்.

 

இதுதொடர்பாக அவர் கூறுகையில், ''மாணவ, மாணவிகளை சமாதானப்படுத்தி விட்டு ஆசிரியர் பகவானை அங்கிருந்து விடுவிக்குமாறு பள்ளித் தலைமை ஆசிரியரிடம் தெரிவித்துள்ளோம். அதற்காக மாணவ, மாணவிகளிடம் ஆசிரியர்கள் பேசிவருகின்றனர்.

 

இதனால், இன்னும் சில தினங்களில்ஆசிரியர் பகவான், கவுன்சலிங்கில் தேர்வு செய்த அருங்குளம் பள்ளிக்கு இடமாற்றப்படுவார். பள்ளிக்கல்வித்துறையின் விதிப்படிதான் இடமாறுதல் நடவடிக்கை எடுக்கப்பட்டது" என்றார்.

BY MANJULA | JUN 23, 2018 12:47 PM #THIRUVALLUR #BHAGAWAN #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS