2018-க்கான நோபல் பரிசினை கூட்டாக பெற்ற இரு வல்லுநர்கள்!

Home > தமிழ் news
By |
2018-க்கான நோபல் பரிசினை கூட்டாக பெற்ற இரு வல்லுநர்கள்!

2018-ம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு ஜேம்ஸ் பி.ஆலீஸன் மற்றும் டசுகோ ஹோஞ்ஜோவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் துறை சார்ந்த வல்லுநர்களுக்கு வழங்கப்பட்டு கவுரவிக்கப்படும் நோபல் பரிசு இந்த ஆண்டு, மேற்கண்ட இருவருக்கும் கூட்டாக வழங்கப்பட்டுள்ளது.

 

இதுபோன்று இருவருக்கும் ஒரே நோபல் பரிசு அளிக்கப்படுவது என்பது மிகவும் அரிதான ஒன்று என்கிற நிலையில், புற்றுநோய் குறி தொற்றினை போக்குவதற்காக உடலின் எதிர்ப்புச் சக்தியையே பயன்படுத்தும் ஆய்வினை மேற்கொண்டு அந்த ஆராய்ச்சியில் வெற்றி பெற்ற இந்த இருவருக்கும் ஸ்வீடனில் நோபல் பரிசு வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டுள்ளது.

TASUKU HONJO, JAMESPALLISON, NOBELPRIZE, NOBELPRIZE2018