ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் இன்று நடைபெற்ற போராட்டத்தில், போலீசாரின் துப்பாக்கி சூட்டுக்கு பொதுமக்கள் 11 பேர் பலியாகினர். மேலும் பலர் ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் தூத்துக்குடியில் தொடர்ந்து பதற்றம் நிலவிவருகிறது.

 

இந்த நிலையில் துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களில் எனது மைத்துனரும் ஒருவர் என பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா தெரிவித்திருக்கிறார்.

 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “எனது அன்புத்தங்கையின் கணவர், ஆருயிர் மைத்துனர் ஜெ.செல்வராஜ் ஸ்டெர்லைட் போராட்டத்தில் அநியாயமாக போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். மிக்க வேதனையோடு பகிர்கிறேன்,” என சில்வா தெரிவித்திருக்கிறார். அவரின் இந்த உருக்கமான பதிவு சினிமா வட்டாரங்களில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS