திருவள்ளூர் மாவட்டம் வெளியகரம் பகுதியை சேர்ந்த அரசுப்பள்ளி ஆசிரியர் பகவான் இடமாற்றம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, மாணவர்கள் தங்களது பெற்றோர்களுடன் போராட்டம் நடத்தினர்.

 

இதனைத் தொடர்ந்து அவரின் பணிமாறுதல் உத்தரவை தற்காலிகமாக அரசு நிறுத்தி வைத்துள்ளது.ஆசிரியர்-மாணவர்களின் இந்த பாசப்போராட்டம் கடந்த 2 நாட்களாக ஊடகங்கள் மற்றும் வலைதளங்களில் பிரபலமாக, இதன் மூலம் ஆசிரியர் பகவான் வெளிச்சத்திற்கு வந்துள்ளார்.

 

இந்தநிலையில் பாலிவுட் நடிகர் ஹிருத்திக்ரோஷன் மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர், ஆசிரியர் பகவானுக்கு தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து உள்ளனர். ஹிருத்திக்ரோஷன் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் உள்ள இந்த பாசப்பிணைப்பு, இந்த நிகழ்வு என் நெஞ்சை உருக்குகிறது'' என தெரிவித்துள்ளார்.

 

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த செய்தியைப் பகிர்ந்து, 'குரு-சிஷ்யர்கள்' உறவு என பூங்கொத்து போட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதேபோல ஏராளமான பிரபலங்கள் ஆசிரியர் பகவானுக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

 

தன்னலம் கருதாத சேவைக்கு என்றும் உயரிய இடமுண்டு என்பதை நிரூபித்துக் காட்டிய, ஆசிரியர் பகவானுக்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள்..

BY MANJULA | JUN 22, 2018 3:21 PM #THIRUVALLUR #ARRAHMAN #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS