பந்தை சேதப்படுத்தியதற்காக ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், துணை கேப்டன் வார்னர் மற்றும் வான்கிராப்ட் ஆகிய மூவருக்கு விளையாட ஓராண்டு தடை விதிக்கப்பட்டது.

 

இந்தநிலையில், சமீபத்தில் நடைபெற்ற பள்ளி விழாவொன்றில் ஸ்டீவ் ஸ்மித் கலந்து கொண்டார். விழாவில் அவர் பேசுகையில், ''உண்மையை கூற வேண்டும் என்றால் நான்கு தொடர்ச்சியாக கண்ணீரில் என் நாட்களை கழித்தேன். ஒரு ஆணாக உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது தவறல்ல.

 

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கியது என் மனதை பெரிதும் பாதித்தது. இதுவரை என் வாழ்நாளில் இது போன்ற கடினமான சூழ்நிலையில் நான் இருந்ததில்லை. இரண்டு மாதங்கள் முடிந்துள்ளன. நான் விரைவில் சிறப்பாக விளையாடி மீண்டும் உயரத்தை தொடுவேன்,'' என்று உருக்கத்துடன் கூறினார்.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS