Looks like you've blocked notifications!

தமிழகம் முழுவதும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கூறியும் கண்டன குரல்கள் வலுத்து வருகின்றன.

 

இந்நிலையில், இந்த போராட்டங்களுக்கு வலு சேர்க்கும் விதமாக தென்னிந்திய  நடிகர் சங்கம் தனது போராட்டத்தை அறிவித்துள்ளது.

 

இதுகுறித்து, இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் நாசர், கார்த்திக், மணிவண்ணன் உள்ளிட்டோர், அடுத்த வாரம் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கூறியும் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.

 

மேலும், போராட்டம் நடக்கும் இடம் இன்னும் தேர்வு செய்யப்படாத நிலையில், போலீசார் அனுமதி பெற்ற பிறகே போராட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS