Looks like you've blocked notifications!

ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட  6 வயது சிறுவனின், ஆசையை நிறைவேற்ற ஒரு நாள் சிறப்பு ஆணையர் பதவி கொடுத்து மகிழ்ச்சியூட்டியுள்ளனர் தெலங்கானா மாநில போலீசார்.

 

தெலங்கானா மாநிலம் ரச்சகொண்டா நகரைச் சேர்ந்த இஷான் (6) என்ற சிறுவன் ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகிறான்.

 

வாழ்நாளில் தான் ஒரு நாள் காவல்துறை அதிகாரியாக வர வேண்டும் என்ற கனவுடன் வாழ்ந்து வருகிறான் இஷான். ஆனால், ரத்த புற்றுநோய் அவன் கனவை  சிதைத்து விடும் நிலையில் உள்ளது.

 

இந்நிலையில், சிறுவனின்  கனவை அறிந்து கொண்ட ரச்சகொண்டா காவல்துறையினர், சிறுவனை தனி சீருடையில் அழைத்து வந்து காவல்துறை அலுவலகத்தில், ஒரு நாள் சிறப்பு ஆணையராக பணியமர்த்தியுள்ளனர்.

BY SATHEESH | APR 4, 2018 10:19 PM #POLICE #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS