இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சாளராக உள்ள ஷர்குல் தாகூர், நடப்பு ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.அவரது பெற்றோர் நரேந்திர தாகூர் - ஹன்சா தாகூர் மகராஷ்டிரா மாநிலம் பால்கர் பகுதியில் வசித்து வருகின்றனர்.

 

இந்த நிலையில், நேற்று இரவு அவரது பெற்றோர் திருமண விழாவொன்றுக்கு சென்றுவிட்டு சுமார் 8 மணியளவில் பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென எதிர்பாராத விதமாக பைக் நிலைதடுமாறியதில், அவர்கள் இருவரும் பைக்கில் இருந்து கீழே விழுந்தனர்.

 

இதில் இருவருக்கும் காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

BY MANJULA | MAY 9, 2018 10:13 AM #IPL2018 #CSK #CHENNAI-SUPER-KINGS #SHARDULTHAKUR #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS