Looks like you've blocked notifications!
'இந்திய ஆக்கிரமிப்பு பாகிஸ்தான்': பிரபல பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சர்ச்சை ட்வீட்!

பிரபல பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாகித் அப்ரிடி, 'இந்திய ஆக்கிரமிப்பு பாகிஸ்தான்' என சர்ச்சையான ட்வீட் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிந்துள்ளார்.

 

அதில், 'இந்திய ஆக்கிரமிப்பு காஷ்மீரின் சூழ்நிலை என்னை அச்சுறுத்துவதாகவும் கவலையளிப்பதாகவும் உள்ளது.

 

காஷ்மீர் சுய நிர்ணய உரிமை மற்றும் விடுதலைக் குரல்களை ஒழிக்க, அப்பாவிகளைக் கொலை செய்கிறது அடக்குமுறை ஆட்சி.

 

இப்போது எங்கே சென்றது ஐக்கிய நாடுகள் மற்றும் பிற சர்வதேச அமைப்புகள், மக்கள் ரத்தம் சிந்துவதை இவர்கள் ஏன் தடுக்க முயற்சிக்கவில்லை?', என காட்டமாக தெரிவித்துள்ளார்.

 

இந்தியப் பாதுகாப்புப் படையினர் காஷ்மீரில் 13 தீவிரவாதிகளைச் சுட்டுக் கொன்ற பிறகு, ஷாகித் அப்ரிடி இந்த ட்வீட்டை பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

BY SATHEESH | APR 3, 2018 7:49 PM #SHAHIDAFRIDI #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS