Looks like you've blocked notifications!

சென்னை சூப்பர் கிங்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இடையிலான 5-வது ஐபிஎல் போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்றது.

 

இதில் முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களுக்கு 6 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 202 ரன்களைக் குவித்தது. தொடர்ந்து 2-வதாக பேட் செய்த சென்னை அணி, 19.5 ஓவர்களில் 205 ரன்களைக் குவித்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 

திரில் வெற்றி பெற்ற சென்னை அணியை பிரபலங்கள் பலரும் வாழ்த்தி வருகின்றனர். இந்த நிலையில் சென்னை வீரர் ஹர்பஜன் சிங்கும் தனது பாணியில் சென்னை அணியை வாழ்த்தியுள்ளார்.

 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "மெட்ராஸ்ல  இருக்குது கிண்டி நீ ஓட்றதோ பெட்றோல் போட்ட வண்டி நீ அடிக்கிற பந்து பொயிற்மாடா என்ன தாண்டி @chennaiipl கூட ஆடுனா உனக்கு அல்லு கேரெண்டீ போயிறுவியா என் ஏரியாவ தாண்டி செம மேட்ச் மாமா,'' என சென்னைத்தமிழில் வாழ்த்தியுள்ளார்.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS