பிரேசில் கால்பந்து வீரர் ரொனால்டினோ(38) ஒரே நேரத்தில் 2 பெண்களை திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

தற்போது கால்பந்து விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ள ரொனால்டினோ, பிரிசில்லா கோயலோ, பியட்ரிஸ் சவுசா ஆகிய 2 பெண்களுடன் பழகி வந்ததாகவும், ஆகஸ்ட் மாதம் 2 காதலிகளையும் ஒரே நேரத்தில் அவர்  திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் தகவல்கள் வெளியாகின.

 

இந்த நிலையில் தனது திருமணம் தொடர்பான தகவல்களை ரொனால்டினோ மறுத்திருக்கிறார். இதுகுறித்து அவர், " இது மிகப்பெரிய பொய். நான் தற்போது திருமணம் செய்யப்போவது இல்லை,'' என விளக்கமளித்துள்ளார்.

BY MANJULA | MAY 25, 2018 12:59 PM #RONALDINHO #FOOTBALL #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS