அவரு இருந்தா 'பூஸ்ட்' மாதிரி இருக்கும்.. வருத்தப்படும் கேப்டன்!

Home > தமிழ் news
By |
அவரு இருந்தா 'பூஸ்ட்' மாதிரி இருக்கும்.. வருத்தப்படும் கேப்டன்!

இந்திய அணியில் தோனி இடம் பெறாதது குறித்து, ரோஹித் சர்மா வருத்தம் தெரிவித்துள்ளார்.

 

நேற்று நடைபெற்ற கடைசி டி20 போட்டியில் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணியை 3-0 என்ற கணக்கில் ஒயிட் வாஷ் செய்தது. இதைத்தொடர்ந்து இந்திய அணியை ரோஹித் சர்மா,கோலி உள்ளிட்ட பலரும் பாராட்டி வருகின்றனர்.

 

இந்தநிலையில் இந்திய அணியில் தோனி இல்லாதது மிகப்பெரிய இழப்பு என இந்திய அணியின் தற்போதைய கேப்டன் ரோஹித் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,'' இலங்கையில் நடைபெற்ற நிதாஹாஸ் தொடரிலும் இதேபோல அவர் பங்கேற்கவில்லை. தோனி இல்லாதது எங்களுக்கு மிகப்பெரிய இழப்பு.அவர் இருந்தால் வீரர்களுக்கு பூஸ்ட் ஆக இருக்கும். குறிப்பாக இளம் வீரர்களுக்கு,'' என தெரிவித்திருக்கிறார்.

 

இந்திய அணி டி20 போட்டிகளில் அறிமுகமானதில் இருந்து விளையாடி வந்த தோனி முதன்முறையாக, இந்த டி20 போட்டியில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

CRICKET, MSDHONI, ROHITSHARMA