Looks like you've blocked notifications!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை-கொல்கத்தா அணிகள் இன்று மோதுகின்றன. ஆனால் காவிரி,ஸ்டெர்லைட் போராட்டங்கள் நடைபெற்று வருவதால் ஐபிஎல் போட்டிகளை சென்னையில் நடத்தக்கூடாது என, எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றன.

 

மேலும் சென்னையின் முக்கிய சாலைகளில் ஒன்றான அண்ணா சாலை அருகே தொடர் போராட்டம் நடைபெற்று வருவதால், ஓட்டலில் தங்கியிருக்கும் கிரிக்கெட் வீரர்கள் மைதானத்துக்கு புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

 

இந்த நிலையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனலில் வர்ணனையாளராகப் பணியாற்றி வரும், நடிகர் ஆர்.ஜே.பாலாஜி இன்று நடைபெறவிருக்கும் போட்டியில் தான் பங்கு பெற மாட்டேன் என அறிவித்திருக்கிறார்.

 

இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில், " காவிரி மேலாண்மை அமையவேண்டி தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. நாம் நமது உரிமைக்காகப் போராடி வருகிறோம்.

 

அதனால் இன்று சென்னையில் நடைபெறவுள்ள சென்னை-கொல்கத்தா போட்டிக்கு நான் வர்ணனையாளராகப் பணிபுரிய மாட்டேன். இதனை சேனல் நிர்வாகத்திடம் தெரிவித்தபோது அவர்கள் எனது உணர்வுகளுக்கு மதிப்பளித்து இதற்கு ஒப்புக்கொண்டனர். அவர்களுக்கு நன்றி,'' என தெரிவித்துள்ளார்.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS