’அந்த ரிசார்ட்டில்’ அன்று நடந்தவற்றை கூற தயார்: விடுதலையான ’கருணாஸ்’!

Home > தமிழ் news
By |
’அந்த ரிசார்ட்டில்’ அன்று நடந்தவற்றை கூற தயார்: விடுதலையான ’கருணாஸ்’!

உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டால் கூவத்தூரில் நடந்தவற்றை கூற தயார் என்று நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் கூறியுள்ளார். மேலும் போலீசார் தன் மீது வழக்குப்பதிவதில் மேற்கொண்ட வேகத்தை மக்கள் பணியில் காண்பிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுள்ளார். 

 

இன்னும் ஆயிரம் வழக்குகள் போட்டாலும் அதை எதிர்கொள்வேன் என்று கூறிய கருணாஸ், தன் மீதான வழக்கில் உண்மை நின்றதாகவும் நீதி வென்றதாகவும்  பேசியுள்ளார். அவதூறு பேச்சு வழக்கில் கைது செய்யப்பட்ட கருணாஸ், சிறையிலிருந்து விடுதலையானவுடன் இவ்வாறு பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

KARUNAS, KARUNASRELEASED