‘டிசம்பருக்குள் அறிவிப்பார் ரஜினி.. அவருடன் புதிய நீதிக்கட்சி...’: ஏ.சி.சண்முகம்!

Home > தமிழ் news
By |
‘டிசம்பருக்குள் அறிவிப்பார் ரஜினி.. அவருடன் புதிய நீதிக்கட்சி...’: ஏ.சி.சண்முகம்!

ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசம் குறித்து கடந்த 2017 டிசம்பர் மாதம் 31-ம் தேதி முதல் அறிவிப்பை வெளியிட்டார்.  அதுமட்டுமன்றி, அடுத்து வரவிருக்கும் 234 சட்டப்பேரவை தொகுதிகளிலும் தனித்து களமிறங்குவோம் என்றும் முன்னதாக கூறியிருந்தார். எனினும் கட்சி சின்னம், பெயர் குறித்த தகவல்கள் சரிவர வெளியாகாத நிலையில், மக்கள் மன்றம் மட்டும் தொடங்கப்பட்டது.


ஆனால்  மேற்கொண்ட தகவல்கள் அறிவிக்கப்படாத நிலையில்,  ரஜினியின் நண்பரும், ‘புதிய நீதி கட்சி’ தலைவருமான ஏ.சி.சண்முகம் வரக்கூடிய நவம்பர் அல்லது டிசம்பர் மாதம் ரஜினி தனது கட்சியின் பெயரை வெளியிடுவார் என்றும், மேலும் அதன் பின்னர் அவரது கட்சியுடன் கூட்டணியில் இணைந்து தன்னுடைய புதிய நீதி கட்சி பயணிக்கும் என்றும் கூறியுள்ளார்.

NEWJUSTICEPARTY, RAJNIKANTH, ACSHANMUGAM, RAJNIMAKKALMANRAM