'காலா' படத்தை கர்நாடகாவில் வெளியிட அனுமதிக்க மாட்டோம் என கர்நாடக திரைப்பட வர்த்தக சபையினர் தெரிவித்துள்ளனர். இதனால் 'காலா' அங்கு வெளியாவதில் சிக்கல் நீடித்து வருகிறது.

 

இந்தநிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினி, "நாளை உலகம் முழுவதும் 'காலா' வெளியாகிறது. ஆனால் கர்நாடகாவில் மட்டும் வெளியாகவில்லை.காவிரி விவகாரத்தில் நான் கருத்து தெரிவித்ததற்காக படத்தை வெளியிடாமல் இருப்பது சரியல்ல.

 

'காலா' வெளியாகும் திரையரங்கங்களுக்குப் பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. முதல்வர் குமாரசாமி  உரிய பாதுகாப்பு வழங்குவார் என நம்புகிறேன்”என்று தெரிவித்தார்.

 

முடிவில் கன்னட அமைப்புகளுக்கும்,கர்நாடக அரசுக்கும் ரஜினி கன்னடத்தில் பேசி கோரிக்கை வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS