புகைப்பட உதவி @IPL

 

ஜெய்ப்பூரில் இன்றிரவு நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்து, 176 ரன்களை எடுத்தது.சென்னை அணியில் அதிகபட்சமாக ரெய்னா(52) ரன்களும் வாட்சன் 39 ரன்களும் எடுத்தனர்.

 

ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக ஆர்ச்சர் 4 ஓவர்கள் வீசி 42 ரன்களை விட்டுக்கொடுத்து, 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதனைத் தொடர்ந்து 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 19.5 ஓவர்கள் முடிவில் இலக்கை எட்டியது.

 

ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் 58 பந்துகளில் 95 ரன்களைக் குவித்து வெற்றிக்கு உறுதுணையாகத் திகழ்ந்தார். மற்றொரு வீரரான கவுதம் 4 பந்துகளில் 13 ரன்களைக் குவித்து, அணியை வெற்றியின் அருகில் கொண்டு செல்ல உதவினார்.

 

இதன் மூலம் அந்த அணி பிளே ஆஃப் சுற்றினுள் நுழைய இன்னுமொரு வாய்ப்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS