Looks like you've blocked notifications!

ஸ்வப்னா என்ற பெண், தன் காரை நிறுத்திவிட்டு நடைப்பயிற்சிக்கு சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது  காரின் கண்ணாடி உடைக்கப்பட்டு, காரில் இருந்த அவருடைய கைப்பை மற்றும் அதில் இருந்த 1500 ரூபாய் பணம், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட சில பொருட்கள் திருடப்பட்டுள்ளது.

 

இதனால் அதிர்ச்சியடைந்த ஸ்வப்னா, போலீசாரிடம் புகார் அளித்து விட்டு, தன் ஓட்டுநர் உரிமத்தை திரும்ப பெறும் முயற்சிகளில் இறங்கியுள்ளார்.

 

ஆனால், சில தினங்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத நபரிடம் இருந்து வந்த கொரியரை திறந்து பார்த்தபோது அதில் ஓட்டுநர் உரிமம் இருந்துள்ளது.

 

இதுகுறித்து அந்த பெண், திருடன் ஓட்டுநர் உரிமத்தை திருப்பி அனுப்பியதால் தான் மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

BY SATHEESH | APR 4, 2018 12:47 PM #THIEF #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS