மாணவர்களுக்கு சப்பாத்தி, தயிர்சாதம் மற்றும் இனிப்புடன் கூடிய அறுசுவை உணவு வழங்கப்படும் என, புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

 

புதுவையில் நடைபெற்ற பள்ளிக்கட்டிட திறப்பு விழா ஒன்றில் முதல்வர் நாராயணசாமி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், "புதுவையில் அரசுப் பள்ளிகளும், தனியார் பள்ளிகளுக்கு இணையாக போட்டி, போட்டு தரமான மாணவர்களை உருவாக்கும் நோக்கில் செயல்பட்டு வருகின்றன. இதற்காக மாணவர் மீது ஆசிரியர்கள் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றனர். பெற்றோர்-ஆசிரியர் சந்திப்புக் கூட்டத்துக்கு முக்கியத்துவம் அளிக்கிறோம்.

 

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சுவையான உணவு கிடைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதற்காக பெங்களூரில் உள்ள தனியார் தொண்டு நிறுவனத்துடன் அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. அதன் படி அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மதியம் வழக்கமான உணவுக்கு மாற்றாக சப்பாத்தி, தயிர் சாதம் மற்றும் சுவையுடன் கூடிய உணவும், இனிப்பு வகைகளும் வழங்கப்படும். விரைவில் இந்த திட்டம் தொடங்கப்படும்.

 

அரசு பள்ளியின் தரத்தை உயர்த்தவும், மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்கவும், நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதனை பயன்படுத்தி மாணவர்கள் நன்றாக படிக்க வேண்டும்,'' என்றார்.

BY MANJULA | JUN 14, 2018 12:10 PM #CHAPATI #CURDRICE #PUDUCHERRY #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS