Looks like you've blocked notifications!

இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதுகிறது.



ஆனால், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்து வரும் வேளையில், ஐபிஎல் போட்டிகள் தமிழ்நாட்டில் நடைபெற கூடாது என அரசியல்வாதிகள், பொதுமக்கள் என தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றனர்.

 

இந்நிலையில், ஐபிஎல் போட்டியை தடை செய்யக்கோரி திருவல்லிக்கேணியில் இருந்து பேரணியை தொடங்கிய விடுதலைச்  சிறுத்தைகள் கட்சியினர், சென்னை சேப்பாக்கம் மைதானத்தை முற்றுகையிட முயன்றனர்.


தொடர்ந்து, அவர்களை கைது செய்த போலீசார் வாகனத்தில் ஏற்றி சென்றுள்ளனர்.
 

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS