நடிகர் அசோக் செல்வனும், சூப்பர் சிங்கர் 'புகழ்' பிரகதியும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தைப் பார்த்து விட்டு அவர்கள் இருவரும் காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் எனவும் தகவல்கள் வெளியாகின.

 

இந்த நிலையில் நடிகர் அசோக் செல்வனை காதலிப்பதாக வெளியான செய்திகளுக்கு, பிரகதி தனது பேஸ்ஃபுக் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறி இருப்பதாவது:-

 

''நான் யாரையும் காதலிக்கவில்லை. திருமணமும் செய்யப்போவது இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். எனக்கு தற்போது 20 வயதுதான் ஆகிறது. கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறேன். எனது துறையில் கவனம் செலுத்தவே விரும்புகிறேன். ரசிகர்களுடன் எனது உறவு நன்றாக இருப்பது குறித்து பெருமை அடைகிறேன். 

 

எனது நெருக்கமான நட்பு குறித்து வெளியான செய்தியால் இந்த கதை ஆரம்பித்தது. முதலில் இதனை நான் வேடிக்கையாக நினைத்தேன். ஆனால் தொடர்ந்து இதுபோன்ற செய்திகள் வெளியானது எனக்கு அதிருப்தியை அளித்தது.

 

அசோக் மற்றும் என்னுடைய வெற்றிகளை பற்றி செய்தி வெளியிடாமல் எங்களின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி தவறான செய்தி வெளியானதில் அதிருப்தி அடைந்துள்ளேன். மீடியாக்களுடன் எனக்கு நல்ல உறவு உள்ளது. பேட்டிகள் அளிப்பது, பத்திரிகையாளர்களுடன் பேசுவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கும். ஆனால் இன்று அவர்களே ஆதாரமில்லாத செய்தியை வெளியிட்டது அதிருப்தி அளிக்கிறது.

 

எனக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் ரசிகர்களுக்கு நன்றி. உங்கள் அன்பையும், ஆதவையும் பெற நான் என்ன செய்தேன் என்று தெரியவில்லை,'' என பிரகதி தெரிவித்துள்ளார்.

BY MANJULA | MAY 18, 2018 4:46 PM #ASHOKSELVAN #PRAGATHIGURUPRASAD #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS