டெல்லி புராரி பகுதியில் ஒரு வீட்டிலிருந்து கைகள், கால்கள், கண்கள் கட்டப்பட்ட நிலையில் பிணமாகத் தொங்கிய 11 பேர் கண்டெடுக்கப்பட்டனர். அவர்கள் வீட்டிலிருந்து போலீசார் கைப்பற்றிய டைரியில் எப்படி தற்கொலை செய்து கொள்வது? எந்த நாளில் செய்யலாம்?உள்ளிட்ட பல்வேறு குறிப்புகளை இறப்பதற்கு முன் அவர்கள் எழுதி வைத்திருந்தனர்.

 

மேலும் வீட்டின் சுவர்களில் சில விசித்திரமான தடயங்களும் போலீசாருக்குக் கிடைத்துள்ளன. வீட்டின் சுவரில் மொத்தம் 11 குழாய்கள் வெளியே வந்து இணைப்பு இல்லாமல் நீட்டிக்கொண்டிருந்துள்ளன. ஆனால் அந்த குழாய்கள் உள்ளே எதனுடனும் இணைக்கப்படவில்லை. இதனால் போலீசார் குழப்பத்தில் ஆழ்ந்தனர்.


அவர்கள் வீட்டிற்கு வெளியில் இருந்து கைப்பற்றப்பட்ட சிசிடிவி கேமராவை சோதித்துப் பார்த்த போலீசார் அதில் அவர்கள் வீட்டிற்கு இரவில் யாரும் வரவில்லை என்றும், அவர்கள் தற்கொலைக்கு தயாராகிய காட்சிகள் அதில் பதிவாகி இருந்ததாகவும் தெரிவித்தனர்.

 

இந்த நிலையில் புராரி  பகுதி குடும்பத்தினர் ஒட்டுமொத்தமாக தற்கொலை தான் செய்து கொண்டுள்ளனர் என, பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. டெல்லி காவல்துறைக்கு வழங்கப்பட்ட  பிரேத பரிசோதனை அறிக்கையில்  10 பேர் தூக்கிடப்பட்டு இறந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனினும், இறந்தவர்களின் உள்ளுறுப்புகள் குறித்த அறிக்கை இன்னும் நிலுவையில் உள்ளது.

 

ஆனால், நாராயணி தேவியின் மரணத்திற்குப் பின்னணியில் உள்ள சரியான காரணம் என்ன? என்பது குறித்து மருத்துவர்கள் இன்னும் உறுதியான முடிவுக்கு வரமுடியவில்லை என கூறப்படுகிறது.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS