கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து மமதி வெளியேற்றப்பட்ட நிலையில், இந்த வாரம் மீண்டும் ஒரு வெளியேற்றப்படலம் நடைபெறவுள்ளது.

 

மும்தாஜ், நித்யா, பாலாஜி, பொன்னம்பலம், அனந்த் வைத்யநாதன் ஆகிய 5 பேர் சக போட்டியாளர்களால் கடந்த வாரம் நாமினேட் செய்யப்பட்டனர். இதில் மும்தாஜ் காப்பாற்றப்பட்டதாக கமல் நேற்று அறிவித்தார். இதனால் மீதமுள்ள நால்வரில் வீட்டைவிட்டு  வெளியேறப் போவது யார்? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.

 

இந்தநிலையில், நித்யா-பாலாஜி இருவரும் காப்பாற்றப்பட்டதாக கமல் அறிவித்தார். மேலும் பொன்னம்பலம் மக்களால் காப்பாற்றப்பட்ட நிலையில், அனந்த் வைத்யநாதன் வீட்டை விட்டு வெளியேறுவதாக கமல் அறிவித்தார்.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS