கடந்த மே 22-ம் தேதி உத்தரகாண்ட் பகுதியில் உள்ள ராம்நகர் பகுதியில் உள்ள கோயில் ஒன்றில், முஸ்லீம் இளைஞர் ஒருவர் இந்து பெண்ணிடம் வெகுநேரம் பேசிக்கொண்டிருந்துள்ளார்.

 

இதனைக்கண்ட கும்பல் ஒன்று இவர்களை நோக்கி வந்துள்ளது. இதனால் அப்பெண் அங்கிருந்து விரைந்து சென்றுவிட, அந்த கும்பல் முஸ்லீம் இளைஞரை சரமாரியாகத் தாக்கத் தொடங்கியுள்ளது.

 

இதனைக்கண்ட சப்-இன்ஸ்பெக்டர் ககன்தீப் சிங் பேடி என்பவர் அக்கும்பலிடமிருந்து  அந்த இளைஞரை கட்டியணைத்து காப்பாற்றி, பாதுகாப்பாக அங்கிருந்து அழைத்துச் சென்றுள்ளார்.

 

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இளைஞரைக் காப்பாற்றிய சப்-இன்ஸ்பெக்டர் ககன்தீப் சிங்கின் செயலை அனைவரும் மனதாரப் பாராட்டி வருகின்றனர்.

BY MANJULA | MAY 25, 2018 2:15 PM #POLICE #YOUTH #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS