Looks like you've blocked notifications!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி போராட்டம் நடந்து வரும் வேளையில், இன்று சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மோதும்  போட்டி நடைபெறக் கூடாது என அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்கள் என  பலரும் போராடி வருகின்றனர்.

 

சென்னை சேப்பாக்கம் மைதானத்தை சுற்றிலும் ஆயிரக்கணக்கானோர் போராடி வருவதால், அந்த இடமே போராட்ட களமாக காட்சியளிக்கிறது.


இதனால், சென்னை கிரௌன் பிளாசா ஹோட்டலில் தங்கியுள்ள கிரிக்கெட் வீரர்கள் மைதானத்திற்கு செல்ல முடியாமல் ஹோட்டலில் தங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. 


நான்கு மணிக்கே கிளம்ப வேண்டிய கிரிக்கெட் வீரர்கள் போராட்டம் காரணமாக, தற்போது தான் கிளம்பி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS