பிறந்த குழந்தையை பெற்றோரே கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

மேற்கு வங்க மாநிலம் ஜபைல்குரி மாவட்டத்தை சேர்ந்த 48 வயதுடைய நபருக்கு 2 மகன்கள்,மகள் மற்றும் பேரக்குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் இவரது மனைவி மீண்டும் கருவுற்றார்.

 

கடந்த சனிக்கிழமை தம்பதியர் இருவரும் அருகில் இருந்த கிராமத்திற்கு சென்றனர். அப்போது அழகான பெண் குழந்தையை அவரின் மனைவி பெற்றெடுத்தார். இது தெரிந்தால் தங்களுடைய உறவினர்கள் கிண்டல் செய்வார்கள், பிள்ளைகளுக்கு அவமானமாக இருக்கும் என நினைத்த தம்பதியர் அருகில் உள்ள குளத்தில் வீசி குழந்தையை கொன்றனர்.

 

குளத்தில் மிதந்த குழந்தையின் உடலைப் பார்த்த கிராமத்தினர் போலீஸ்க்கு தகவல் அளிக்க விரைந்து வந்த போலீசார் தம்பதியரைக் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS