Looks like you've blocked notifications!

பாகிஸ்தானில் ஒளிபரப்பப்பட்டு வரும் ஒரு தனியார் தொலைக்காட்சியில், முதன்முறையாக திருநங்கை ஒருவர் செய்தி வாசிப்பாளராக பணியமர்த்தப்பட்டுள்ளார்.

 

பாகிஸ்தான் ஊடக வரலாற்றிலேயே முதல்முறையாக, கோஹினூர் செய்தி என்ற தொலைக்காட்சி, மரிவியா மாலிக் என்ற  திருநங்கையை செய்தி வாசிப்பாளராக பணியமர்த்தி அங்கீகரித்துள்ளது.

 

பத்திரிக்கை துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள மரிவியா மாலிக், திருநங்கைகள் எல்லா கல்வித்தகுதிகளையும் பெற்றிருந்தபோதிலும், அவர்களுக்கு எந்த விதமான பணி வாய்ப்புகளும் அளிக்கப்படுவதில்லை என வருத்தம் தெரிவித்துள்ளார்.

BY SATHEESH | MAR 27, 2018 4:47 PM #PAKISTAN #FIRSTTRANSGENDERNEWSREADER #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS