போராட்டங்கள் காரணமாக, சென்னையில் நடைபெறவிருந்த அனைத்து போட்டிகளும் தற்போது வேறு இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளன. இது கிரிக்கெட் ரசிகர்களுக்கு மட்டுமின்றி,சென்னை அணியின் வீரர்களுக்கும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

இதனால் நாளை புனேவில் நடைபெறவிருக்கும் போட்டிகளை நேரில் காண்பதற்காக, சுமார் 1000-க்கும் மேற்பட்ட சென்னை ரசிகர்கள் சிறப்பு ரெயில் மூலம் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திலிருந்து இன்று காலை புறப்பட்டு உள்ளனர்.

 

இதுகுறித்து சென்னை அணியின் வேகப்பந்து வீச்சாளர் இம்ரான் தாகிர் தனது ட்விட்டர் பக்கத்தில், "கொஞ்சம் இங்க பாரு கண்ணா. இது பாசத்துக்கும், அன்புக்கும் கட்டுப்பட்ட கூட்டம்.

 

மேட்ச் புனேல இல்ல பாலைவனத்துல நடந்தாலும் இந்த கூட்டம் வரும். உங்கள் அன்புக்கு தலை வணங்குகிறேன். ரசிகர்களுக்கு சொல்லிக்கொள்வது இதுதான்: படையப்பா நாளைக்கு சீக்கிரம் முடிச்சிடு,'' என பதிவிட்டுள்ளார்.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS